
காட்பாடி தொகுதியில் காரில் இருந்து இறங்கி வந்து துரைமுருகன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.18-காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் காட்பாடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் துரைமுருகன். அப்போது கீரை சாத்து, மிளகாய்க்குப்பம் , தீயார் குப்பம் ஆகிய பகுதிகளில் தனது காரில் இருந்து இறங்கி வீடு வீடாகச் சென்று தனக்கு ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இப்படி வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய துரைமுருகனை பார்த்து வாக்காளர்கள் இது புதியதாக உள்ளது என்று முனுமுனுக்கத் தொடங்கினர். குறிப்பாக திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகளை துரைமுருகன் விளக்கிப் பேசினார். மேலும் கட்சியின் புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு அவர் பிரச்சாரம் செய்தார் .காரில் இருந்து இறங்காமல் வாக்கு சேகரித்து வந்த துரைமுருகன் இம்முறை காரில் இருந்து இறங்கி வந்து வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டது புதுமையாக உள்ளது என்று காட்பாடி வடக்கு ஒன்றிய வாக்காளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply