அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் குடியாத்தம் தனி தொகுதி வேட்பாளர் தபிதாள் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப்.14-புரட்சித்தாய் சின்னம்மா வி.கே. சசிகலா ஆசியோடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் தபிதாள் குடியாத்தம் நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது டீச்சர்ஸ் காலனி பகுதியில் கரும்பு ஜூஸ் தயாரித்து வாக்காளர்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.டீச்சர்ஸ் காலனி, பாண்டியன் நகர், ஆர். எஸ். நகர், பலமனேர் சாலை, பிச்சனூர், சித்தூர் கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தபிதாள் வாக்கு சேகரித்தார்.வேட்பாளருடன் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அய்யா) நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply