Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
WIN
கெங்கநல்லூர் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர் காந்தி பங்கேற்பு!
காட்பாடி அருகே கோர விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி!வேலூர், மார்ச் 12-காட்பாடி அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் ஒருவரின் தலை லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், நஞ்சுகொண்டாபுரம் அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கவியரசன் (19). இவர் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து, கவியரசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வள்ளிமலையில் உள்ள மற்றொரு நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மீது இவர்களது இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த கவியரசனின் தலை, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த நண்பர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார், கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பரைப் பார்க்கச் சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளாக கட்சிப் பணி ஆற்றிய வந்த அ.லோகுவிற்கு நகர செயலாளர் பதவி வழங்கியவி.சி.க., தலைவர் திருமாவளவன் !
பேரணாம்பட்டில் அறிஞர் அண்ணா துரையை மறந்த அதிமுகவினர்!வேலூர், மார்ச் 11-நேற்றைய முன் தினம் பேரணாம்பட்டு நகர அதிமுகவினர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகித்து வந்தனர். அந்தத் துண்டு பிரசுரத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ஜான் பாண்டியன், பாவேந்தர், ஜி. கே. வாசன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வேலழகன் ஆகியோரது படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. பொதுவாக அதிமுக நோட்டீஸ்களில் அறிஞர் அண்ணாதுரையின் படங்கள் இடம்பெறும். ஆனால் இந்த துண்டு பிரசுரத்தில் பெரியார், அண்ணா படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது பேரணாம்பட்டு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
அணைக்கட்டு மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா!
சர்வதேச மகளிர் தின விழாவில் சாதனை மகளிர் விருது வழங்கி பாராட்டு!
பேரணாம்பட்டு நகர ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர்களாக எ. ராஜேஷ்குமார், டி.தம்பிசேகர் நியமனம்!
நேர்மைக்கு பரிசாக மின்வாரிய குடியிருப்பில் வாடகை கட்ட தேவை இல்லை!!!!!
காட்பாடி கல்புதூரில் மழலையர் பள்ளி ஆண்டு விழா: காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் ஜனார்த்தனன் பரிசுகள் வழங்கல்!வேலூர், மார்ச் 10-காட்பாடி மெட்டுக்குளம் இஹன்ட் மழலையர் பள்ளியின் ஆண்டு விழா கல்புதூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் பிரித்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஹீரா வரவேற்று பேசினார்.காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் ஆர்.சுதாகர், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி பேசினர்.கடந்த ஒரு ஆண்டில் குழந்தைகள் கற்றல், திறமை, ஒழுக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் பெற்ற வளர்ச்சியை கொண்டாடும் நாள் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பல்வேறு நடனம், பாடல், நாடகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், குழந்தைகளின் முயற்சி மற்றும் சாதனைகளை பாராட்டும் விதமாக விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இவ்விழாவில் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்டத்திற்கு துணை ராணுவப் படையினர் குழு வருகை!
1
…
29
30
31
…
91