சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு கதவுகள் பூட்டப்பட்டது ஏன் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் இது தொடர்பாக கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கூறும்பொழுது கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெரிய இரும்பு கேட் கள் உள்ளன ஒன்றில் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே வருவதற்கும் இரண்டாவது இரும்பு கேட் வாகனங்கள் வெளியே செல்வதற்காக ஆனால் இன்று காலை நான்கு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்கள் இரண்டு இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டது கண்டு உள்ளே செல்ல முடியாது நிலை ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் தங்கள் கார்களை சூலூர் செல்லும் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது இது குறித்து விசாரித்து பொழுது இரண்டு இரும்பு கதவுகள் பழுதாகி உள்ளது என்று ஒரு பொய்யான தகவலை தெரிவித்தார்கள் இது குறித்து இரண்டு இரும்பு கதவுகளை ஆய்வு செய்தபோது இரண்டும் நல்ல நிலையில் உள்ளது அறிய முடிந்தது எதற்காக இரண்டு பெரிய கதவுகள் மூடப்பட்டு இருசக்கர வாகனம் நடந்து செல்வதற்கு மட்டும் ஒரு சிறிய கேட் திறக்கப்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா. லோகு தெரிவித்தார்