தனக்கு நியாயம் கோரி கடந்த 8 ஆண்டுகளாக காவல்துறையிடம் தொடர்ந்து மனு கொடுத்து வரும் ஆட்டோ ஓட்டுநர்: இவருக்கு இந்த ஆண்டிலாவது நியாயம் கிடைக்குமா?வேலூர், ஜூலை 29-ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ரூ. 2 லட்சம் தராமல் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து சக ஆட்டோ ஓட்டுநரை இழுத்தடித்து வருகிறார். இதனால் பணத்தை இழந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். இவருக்கு இந்த ஆண்டிலாவது காவல்துறையிடம் இருந்து நியாயம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.வேலூர் மாவட்டம், வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் தேவ சகாயம் (51). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள தனது ஆட்டோவை கிருஷ்ணமூர்த்தியின் சொந்த தேவைக்காக கொடுத்துள்ளார். அந்த ஆட்டோ மற்றும் அவரது வீட்டு பத்திரத்தை வைத்து ரூபாய் 2 லட்சத்தை புரட்டி எடுத்துக்கொண்ட கிருஷ்ணமூர்த்தி தற்போது ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட தேவசகாயம் தனது பணம் ரூ. 2 லட்சத்தை திருப்பி தருமாறு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு வருகிறார். ஆனால் அவரோ விசிக பிரமுகர்கள் சிலர் உதவியுடன் தப்பித்து கொண்டு வலம் வந்து கொண்டுள்ளார். போதாத குறைக்கு காவல் துறையைச் சார்ந்த சிலர் கிருஷ்ணமூர்த்தியிடம் இணக்கமான முறையில் நடந்து கொண்டு மறைமுகமாக உதவி புரிகின்றனர். தனியார் நிதி நிறுவனம் தன்னிடம் வாங்கிய தொகையை கிருஷ்ணமூர்த்தி செலுத்தாததாலும், தேவசகாயம் ஜாமீன் கையெழுத்து போட்டதாலும், தேவசகாயத்துக்கு சொந்தமான ஆட்டோ மற்றும் வீட்டு பத்திரத்தை ஜப்தி செய்து கொண்டு சென்று விட்டனர். இதனால் கடந்த 8 ஆண்டுகளாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைத்து கொண்டுள்ளார் தேவசகாயம். பணத்தை திரும்ப தருமாறு கேட்டு வந்த தேவசகாயத்தை கடந்த 2019ல் ஆட்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி இதனால் வரை தேவசகாயத்தை தாக்கியது தொடர்பாக 7 மருத்துவ அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தேவ சகாயம் கொடுக்கும் புகார்களை வேலூர் தெற்கு காவல் நிலையத்திலும் ,வேலூர் பாகாயம் காவல் நிலையத்திலும் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றனர். ஒரு விசாரணை கூட நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது காவல் ஆய்வாளர்களாக இருந்த சுபா மற்றும் தற்போது அணைக்கட்டு டிஎஸ்பியாக உள்ள நந்தகுமாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டனர். சுபா மற்றும் டிஎஸ்பி நந்தகுமார் ஆகியவர்களிடம் இது குறித்து விசாரித்தால் இந்த வழக்குக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்கும்.இதனால் கிருஷ்ணமூர்த்தி காவல்துறையின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டுள்ளார். விபச்சார அழகிகளை வைத்து தங்கும் விடுதிகளில் மற்றும் சில தனியார் இல்லங்களிலும் விபச்சாரத் தொழிலை செய்து வருகிறார் கிருஷ்ணமூர்த்தி. விபச்சார அழகிகளை ஏற்றிச் செல்ல இந்த ஆட்டோ பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது. இவரை நேரில் பார்த்தால் அனைவரும் இவரை பற்றிய தகவல்களை தெளிவாக விவரிப்பார்கள்.அதேபோன்று கிருஷ்ணமூர்த்தியின் கைங்கரியத்தால் தேவசகாயத்தின் சித்தி சின்னம்மாள் (75) என்பவரை பேபி ஓட்டல் அருகில் குறி வைத்து தாக்கியுள்ளது ஒரு மாஃபியா கும்பல். இதுதொடர்பாக புகார் கொடுத்தும் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் இந்த கொடூர தாக்குதலையும் கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவம் கடந்த 2020ல் அரங்கேற்றினார் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு தொடர்ந்து அட்டூழியங்களை செய்த வண்ணம் உள்ளார் 8 ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. ஆனால் காவல்துறையோ அவர் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தி தேவசகாயத்திற்கு தர வேண்டிய பணத்தை காவல்துறையும் இதுநாள் வரை பெற்று தரவில்லை. தொடர்ந்து புகார் மேல் புகார் கொடுத்து வருகிறார் தேவசகாயம். கடந்த எட்டு ஆண்டுகளாக அவரது புகாரின் மேல் காவல்துறை எந்த கரிசனமும் காட்டவில்லை. அப்போது நடந்த பிரச்சனை என்பதால் தற்போது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தற்போது கூறியுள்ளனர் தெற்கு காவல் நிலைய போலீசார். இதனால் போலீசாரை நம்பி தொடர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக புகார் மனுக்களை கொடுத்து கொடுத்து வேதாளம் முருங்கை மரத்தின் மீது ஏறியது போல மீண்டும் மீண்டும் மனம் தளராமல் புகாரை கொடுத்து வருகிறார் தேவசகாயம். ஆனால் பழைய வழக்கு 2022-ல் பாகாயம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த சுபா, கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தேவசகாயத்தை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். இப்படி நாட்டில் நியாயம் தர்மம் என்று ஒன்று இருந்தால் தேவசகாயத்துக்கு நீதி கிடைக்கும். காவல்துறையின் மீது அவர் வைத்துள்ள அதீத நம்பிக்கையால் தொடர்ந்து புகார் மனுவை அளித்து வருகிறார் தேவ சகாயம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கடந்த ஜூலை 4ம் தேதி புகார் மனு கொடுத்துள்ளார் தேவசகாயம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில். அந்த புகார் மனு வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை விசாரிக்கும் உதவி ஆய்வாளர் இது பழைய வழக்கு இதை தற்போது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று கேட்டு வருவதாக தெரிகிறது .ஆதலால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டு உண்மை என்ன பொய் என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள தேவசகாயத்திற்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார். காவல்துறையின் மீது தேவசகாயம் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேறுமா? அல்லது நிறைவேறாமல் போகுமா? என்பது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கும் .அதுவரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply