பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவது எப்போது?வேலூர், ஜூலை 26-வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி த.வெ.க .கட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் கடந்த 06. 09. 2019ல் துரைமுருகன் எம். எல். ஏ.வால் தொடங்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்கூடம் தற்போது பயன்பாடு இல்லாமல் அசுத்தமான நிலையில் உருமாறி உள்ளது. மின்விசிறிகள் உண்டு. ஆனால் மின் இணைப்பு இல்லை. பயன்பாடு இல்லாத இந்த நிழற்கூடத்தை த.வெ.க.சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் கடந்த 3 மாதங்களாகியும் த.வெ.க. கட்சி அலுவலகம் எதிரே உள்ள இந்த கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கும் நிலையை கண்டறிந்தார். ஆதலால் குறிப்பாக இந்த பயணிகள் நிழற்கூடத்தை கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ரீல்ஸ் மோகத்தில் உள்ளார். ஏன் கோடையில் கடும் வெப்பத்தில் பயணிகள் மின் விசிறி இருந்தும் மின் இணைப்பு இல்லாமல் அவதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் ஏனோ பாராமுகத்தில் உள்ளார் என பொதுமக்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்த அலுவலகம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா? என்பது பொதுமக்களின் விடை தெரியாத கேள்வியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply