வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதித்து வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (70), கடந்த 2025 ஜூலை மாதம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். பின்னர் அவரை போலீசார் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.










Leave a Reply