வேலூர் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புக்கு களப்பணியாளர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பயிற்சி!வேலூர், ஜூலை 12-வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் பயிற்சி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் அளிக்கப்பட்டது. களப்பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி கையடக்க கணினிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகளை முழுமையாகவும், துல்லியமாகவும் சேகரித்து அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளை விரைவாகச் சென்றடைய உறுதுணையாக செயல்படுமாறு அறிவுறுத்தி பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் மாநில திட்ட மேலாளர் (பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு) எஸ். ராஜராஜன், மாநில திட்ட மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஆர். சௌந்தர் ராஜன், மாநில திட்ட அலுவலர் (சமுதாய மறுவாழ்வு சேவை) எஸ். அரவிந்த் பரத்வாஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச. பாபு, இளநிலை பதிவு அலுவலர் (JRO) இனியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்னர்.