அரியலூர் மாவட்டத்தில், உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் ஒரு சிலர் வீட்டு குடிநீர் இணைப்புகளில் விதிகளுக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சுவதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தடையின்றி வழங்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தியுள்ள வீட்டு உரிமையாளர்கள் மின்மோட்டாரை உடனடியாக துண்டித்து அப்புறப்படுத்திட தெரிவிக்கப்படுகிறது. தவறினால் அவர்களது மின்மோட்டார் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தெரிவித்துள்ளார்.