மேட்டுப்பாளையம் 07.07.2026மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி வகுப்பு வேதியியல் மற்றும் இயற்பியல்துறைசார்பாக “பணிவாய்ப்பு வழிகாட்டுதல்” குறித்து நடைபெற்றது. இதில் முனைவர் போ.சிவக்குமார் வேதியியல் துறை கௌரவ விரிவுரையாளர் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் மோ.செந்தில்குமார், மாணவர்கள் மனவளத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முதல்வர் பொறுப்பு முனைவர் G.A ஜெயசங்கர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் திரு மகேஷ் துளசி Founder & CEO , Bodhi Academic Consulting , பணிவாய்ப்பு வழிகாட்டுதல் பற்றி மாணவர்களுக்கு Emotional Intelligence, visual & kinesthetic பற்றி எடுத்துரைத்தார். முனைவர் C. செல்வகுமார், இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளர் நன்றி உரை நிகழ்த்தினார்.உணவு இடைவேளைக்கு பிறகு முன்னாள் சிறந்த மாணவர்கள் செல்வி M.ரோஜா & S.அர்ச்சினி ஆங்கில துறை பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை மாணவர்கள் இடையே தங்கள் அனுபவத்தையும், கடின உழைப்பு விடாமுயற்சி செய்தியுடன் அனுபவத்தையும் எடுத்துரைத்தார். முனைவர் M.ஜெயலட்சுமி இயற்பியல்துறை கௌரவ விரிவுரையாளர், வரவேற்று முனைவர் K.சங்கர் வேதியியல்துறை கௌரவ விரிவுரையாளர் நன்றி உரை வழங்கினர். வேதியியல்துறை தலைவர் முனைவர் தி.சாந்தி மற்றும் இயற்பியல் துறை தலைவர் முனைவர் R.பாலன் உடன் இருந்தனர். முனைவர் தி.சாந்தி வேலைவாய்ப்பு மையம் சார்பில் TNPSC & TN Skill development free Coaching Class மற்றும் Career Guidence Campus Interview பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.