காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு – நிலுவை கோப்புகள், பட்டா தாமதம், நிர்வாக அலட்சியம் என தொடர் புகார்!வேலூர், ஜூலை 4-காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, பல மாதங்களாகவும் சில நேரங்களில் வருடக் கணக்கிலும் நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் கூறுவதாவது, வருவாய் கோட்டாட்சியரிடம் நிலுவை கோப்புகள் குறித்து கேட்டால், “வருவாய்த் துறை விசாரணைக்குப் பிறகே பதில் அளிக்க முடியும்” என தெரிவிக்கப்படுகிறது. எப்போது விசாரணை நடைபெறும் என்று கேட்டால், “பணிச்சுமை அதிகமாக இருப்பதால் தற்போது வர முடியாது; அந்தப் பகுதிக்கு வரும்போது கண்டிப்பாக வருவோம்” என்று அதிகாரிகள் கூறுவதாகவும், ஆனால் பின்னர் அந்தப் பகுதிக்கு வந்தாலும் சம்பந்தப்பட்ட கோப்புகள் பரிசீலிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், அலுவலகத்திற்கு பலமுறை நேரில் சென்றாலும், “கோப்புகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று தேடிக் கொண்டிருக்கிறோம்; அடுத்த வாரம் வாருங்கள்” என்ற பதிலே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.ஆன்லைன் பட்டா மற்றும் நில விவரங்களில் சில சர்வே எண்கள் கணினி அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படாததால், நிலங்களை விற்க முடியாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக மக்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், “வருவாய் ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளோம்”, “கோட்டாட்சியரிடம் கூறியுள்ளோம்” என்ற பதில்களே கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், பட்டாவில் தொடர்பில்லாத நபர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவது, ஏற்கனவே உள்ள உரிமையாளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இத்தகைய புகார்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், சிலருக்கு மட்டுமே பட்டா கிடைத்ததாகவும், மீதமுள்ளவர்களிடம் பின்னர் “உங்கள் பெயர் பட்டியலில் இல்லை” என்று கூறப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.பணம் கொடுத்து பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், ஏழை மற்றும் சாதாரண மக்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்கப்படுவதில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பட்டா மற்றும் வருவாய்த் துறை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் விண்ணப்பம் செய்தால் அதை எடுத்து பார்ப்பது கூட இல்லை. இதற்கு முன்னர் அமைச்சர் துரைமுருகன் பெயரைச் சொல்லி எந்தவொரு பணியையும் செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். பணம் தருபவர்களின் பணிகள் மட்டுமே முடித்து தரப்பட்டது. பணம் தராதவர்களின் பணிகளை முடித்து தராமல் இழுத்தடித்து வந்தனர். காட்பாடியில் ஒரு பட்டா பெற வேண்டும் என்றால் ரூபாய் 15,000 முதல் ரூ.30,000 வரையில் செலவாகிறது. குறிப்பாக இந்த சர்வேயர் செக்ஷ்ஷனுக்கே பணம் கொடுத்து அழுது மாளாது. அந்த அளவிற்கு ஏழைகளின் ரத்தத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கின்றனர் அரசு அலுவலர்கள். லஞ்ச ஒழிப்புத்துறையும் இவர்களை இதுநாள் வரையில் சரிவர கவனிக்கவில்லை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றும் சொல்லலாம். காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் பார்வை முழுவதுமாக வைத்தால் மட்டுமே இந்த விலங்கு மீன்கள் சிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை பணம் என்றால் இனம் கூட வாயை பிளக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கும் அதே நிலைதான் பணம் இல்லை எனில் எந்த வேலையும் நடக்காது ஏன் அனுபவம் அசையாது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு நிலைமை மிகவும் கேவலமாக படு மோசமாக சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டு இருக்குதஅதை திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டு இருக்குது என்று மருதகாசி பாடலின் வைர வரிகளுக்கு இணங்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற ஒரு நிலாளபை பிரிவு செயல்பட்டு வருவது மிகவும் வெட்கக்கேடானது வேதனைக்குரியது என்று தான் சொல்ல வேண்டும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் இங்கு மாறவே இல்லை என்று சொல்லலாம். அப்படியே அதன் நிலைமை உள்ளது வரிசைப்படி பதிவு விருப்பத்தை ுுடைுஅயாது அவர்கள் விருப்பம் போல் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தந்து இங்கு பணியாற்றிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை தமிழக முதல்வராக உள்ள விஜயின் அரசு கொண்டுவர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply