தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க புதிய உறுப்பினர்கள் இணையும் விழா!ராணிபேட்டை, ஜூலை 3-தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூபதி, மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரராஜன் , மாநிலச் செயலாளர் (வடக்கு மண்டலம்) பக்கிரிசாமி , ஒருங்கிணைந்த வேலூர்–திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சற்குணம், திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் கபிலன், மாவட்டப் பொருளாளர் சங்கரநாராயணன், மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கலையரசி, சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதன், ஆற்காடு வட்டத் தலைவர் வெங்கடேசன், நெமிலி வட்டத் தலைவர் டோமேஷசன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் அனைத்து வட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை மனமார்ந்த வரவேற்புடன் சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.சங்கத்தின் ஒற்றுமையையும், வளர்ச்சியையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா, மிகுந்த உற்சாகத்துடனும், சிறப்புடனும் நிறைவுற்றது.புதியதாக இணைந்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை முன்னெடுத்து, அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, உறுப்பினர்களின் நலன்களையும், சங்கத்தின் வளர்ச்சியையும் மேலும் உயர்த்திட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்திய சோளிங்கர் வட்டத் தலைவர் நவநீதனுக்கும், நெமிலி வட்ட நிர்வாகிகளுக்கும், விழா வெற்றிக்கு ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மு. வெங்கடேசன், B.A., (Ex-Army)மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், ராணிப்பேட்டை மாவட்டம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply