பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஜேசிபிகளுக்கு அபராதம் விதிப்பு!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி மூன்று ஜேசிபிக்கள் இயங்குவதாக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமி பேரணாம்பட்டு பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது மூன்று ஜேசிபிக்கள் அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூன்று ஜேசிபிக்களுக்கும் ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் தொகையை அபராதமாக விதித்தார். அத்துடன் அந்த மூன்று ஜேசிபிக்களையும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து இந்த மூன்று ஜேசிபிக்களின் உரிமையாளர்களும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வேலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி விட்டு அந்த மூன்று ஜேசிபி வாகனங்களையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.