
வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை-அன்னதானம்!வேலூர், ஜூன் 23-தமிழக முதல்வர் தலைவர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் .வேல்முருகன் தலைமையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்.கலைமதி மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர், ராமமூர்த்தி விருப்பாட்சிபுரம் பகுதி செயலாளர் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் பிரசாந்த், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் தனசேகர், தோட்டப்பாளையம் பகுதிச் செயலாளர் பாரத் மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்த பிரியா, பூஜா, சரளா, லட்சுமி, புஷ்பா, அமலா, யாமினி, ராஜேஷ், சுகுமார், சிவசங்கர், அஜய், அரவிந்த் ,ப்ரேம், பரத் ,செல்வம், ஆனந்த், சாரதி, வினோத், அன்பு, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.










Leave a Reply