வேலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் நாகராஜ்!வேலூர், ஜூன் 17-வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் 1-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் சில வருவாய் ஆய்வாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே மாநகராட்சிக்குள் நான்கு மண்டலங்களில் மாறி மாறி பணியாற்றி வருவது குறித்து பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.1-வது மண்டலத்தில் வருவாய் அலுவலராக (ARO) பணியாற்றி வரும் நாகராஜ் மற்றும் கழிஞ்சூரைச் சேர்ந்த கணக்காளர் பத்மநாபன் ஆகியோர் நீண்டகாலமாக வேலூர் மாநகராட்சியிலேயே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாகராஜ் மீது பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் மீது இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கணக்காளர் பத்மநாபன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, சிபாரிசுகள் செய்து வருவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் பணிக்காலத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு தங்களது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை வெளிக்கொணர, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவுகள், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், நீண்டகாலமாக ஒரே மாநகராட்சியில் பணியாற்றுவதால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசு விரிவான உரிய விசாரணை நடத்திட வேண்டும். அந்த விசாரணையில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் நாகராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.