வேலூர் பள்ளிகொண்டா ஆதி வராஹி கோயிலில் கைத்தறி துறை அமைச்சர் தரிசனம்!வேலூர், ஜூன் 14-தமிழக அரசின் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உலகிலேயே மிகப்பெரிய வாராஹி கோயில் வேலூர் பள்ளிகொண்டா த்ரீஸ்தலம் ஆதி வாராஹி ஷேத்திரத்துக்கு வந்து வாராஹி தரிசனம் செய்து யாகரிஷி வராஹ குருஜியிடம் ஆசிகள் பெற்றார். அமைச்சருடன் தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், கீ .வ .குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.