உலகக் கோப்பை கால்பந்து போட்டியை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள்தொலைக் காட்சியில் கண்டுகளிப்பு!செய்யாறு, ஜூன் 12 -உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கிய முதல் ஆட்டத்தை செய்யாறு கால்பந்தாட்ட வீரர்கள் கண்டுகளித்தனர்.உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப் பட்டு வருவது உலக கால்பந்து போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கால்பந்து போட்டி கடந்த 1930ம் ஆண்டு முதன் முதலில் தொடங்கியது. இந்தப் போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் மட்டுமே தகுதி பெறுகின்றன. இதற்காக பல்வேறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு தகுதிவாய்ந்த அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.அந்த வகையில் நடப்பாண்டு 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இந்தப் போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் சேர்ந்து நடத்தப்படுகின்றன. இதற்கான தொடக்க விழா நேற்று இரவு பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்தப் போட்டியில் 48 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.இவ்வாண்டுக்கான முதல் போட்டி மெக்சிகோ – தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மோதியது.திருவண்ணாமலை மாவட்டத்திலேயே செய்யாறு கால்பந்து போட்டியில் சிறந்து விளங்குகிறது. செய்யாறில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட வீரர்கள் உள்ளனர். இவர்கள் பள்ளி – கல்லூரி பருவங்களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் குழுக் குழுவாக ஒன்று சேர்ந்து தங்களது வீடுகளில் நேற்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி தொடக்க விழாவையும், முதல் போட்டியையும் கண்டுகளித்தனர்.இது குறித்து மாநில அளவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி ( 57 ). கூறியதாவது; கால்பந்தாட்டம் என்றாலே எனது உயிர். கடந்த 1990ம் ஆண்டு நான் செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் படித்திருந்த போது எனது தலைமையில் கால் பந்தாட்ட குழு மாநில அளவில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றோம். இதனால், செய்யாருக்கும் – அரசு பள்ளிக்கும் பெருமையை சேர்த்து கொடுத்தோம். செய்யாறில் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது இளைஞர்கள் கால்பந்தாட்டத்தை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். ஒரு மாதத்துக்கு மேல் நடைபெற உள்ள ‘உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள்’ எங்களுக்கு தினம் தினம் ஒரு விழாவாகவே நாங்கள் கண்டுகளிக்கப் போகிறோம். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் இந்தியா இன்னும் தகுதி பெறவில்லை என்பதுதான் எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது; ‘இவ்வாறு கால்பந்தாட்ட வீரர்என்.தண்டபாணி கூறியுள்ளார்.
Leave a Reply