
காட்பாடியில் தில்லாலங்கடி மண்டல துணை வட்டாட்சியர் ‘கோல்டன் முருகன்’ மீது நடவடிக்கை பாயுமா?வேலூர்,ஜூன் 11-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பணிபுரிபவர் பொன்.முருகன் என்கிற கோல்டன் முருகன். இவர் காட்பாடி தாராபடவேட்டில் போலி பத்திரம் மூலம் இடத்தை பதிவு செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்ய பகிரங்கமாக முயற்சி செய்துள்ளார் .இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். அத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பு வேலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோட்டாட்சியர் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போலி பத்திரம் மூலம் பதிவு செய்த இடத்திற்கு பொன்.முருகன் ‘ப’ வைட்டமினை கணிசமாக பெற்றுக்கொண்டு பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனால் பட்டா மாற்றம் செய்யப்பட்டவர் தனது பெயர் பட்டாவில் இல்லாததால் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் நடையாய் நடந்து கொண்டுள்ளார். இப்படி முறையாக உள்ள பட்டாக்களை முறைகேடுகளாக பதிவு செய்து கொடுத்துவிட்டு நுகர்வோர்களை அலையாய் அலைய விடுகின்றனர் இதுபோன்ற தில்லாலங்கடி அரசு அலுவலர்கள். இப்படி பொது மக்களை பாடாய்படுத்தி தில்லுமுல்லு வேலைகளை செய்து கணிசமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டு செல்லும் அரசு அலுவலர்கள் மீது தயவு தாட்சண்யம் காண்பிக்காமல் பொன்.முருகன் என்ற கோல்டன் முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுப்பதுடன் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுத்து அதன் மூலம் அடுத்து வரும் அரசு அலுவலர்கள் முறைகேடாக பணிகளை செய்து தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வழிவகை செய்ய மாண்புமிகு ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் இதுபோன்ற அரசு அலுவலர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சாட்டையை சுழற்றுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கோல்டன் முருகன் பித்தளை முருகன் ஆவது விரைவில் நடக்கும் என்கின்றனர் நன்கு விஷயம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள். அதுவரை பொறுத்திருப்போம்.










Leave a Reply