
காட்பாடி கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதிப்பு: ஆத்திரமடைந்த இளைஞர்கள் திடீர் சாலை மறியல்!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு டிஜே இசை நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி தராததால் ஊர் பொதுமக்கள் அனைவரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களை அடித்து விரட்டினர். இதையடுத்து தடைபட்ட போக்குவரத்தை சரி செய்வதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திணறியவாறு வாகனங்களை இயக்க வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கோவில் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை வைத்து பாடல்களை அதிக சத்தத்துடன் ஒளிபரப்புவதால் நோயாளிகள், வயதானவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது .இதனையும் காவல்துறை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை காட்பாடி காவல் நிலையத்தில் உள்ள போலீசார் செய்கிறார்களோ இல்லையோ, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இதற்காக தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இல்லை கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply