
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு பணி நியமன ஆணை நகல் வழங்கிய இராமநாதபுரம் ஆசாமி கைது!வேலூர், மே 29-அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு வேலைக்கான பணி நியமன ஆணை நகல் வழங்கி சுமார் 44 நபர்களிடமிருந்து ரூ. 3,50,000/- வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாக மஞ்சுளா என்பவர் மாவட்ட காவல் துறையில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 30.08.2025 அன்று வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மனுவைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். யூ. சிவராமனின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தார். இந்நிலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்டின் (48) த/ பெ. அண்ணாதாசன் என்பவரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி உத்தரவின்படி ஜெஸ்டின் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.










Leave a Reply