செய்யாறில் ‘உலக பட்டினி’ தினத்தையொட்டி த.வெ.க., சார்பில் அன்னதானம் வழங்கல்!செய்யாறு, மே 29 -செய்யாறில் ‘உலக பட்டினி’ தினத்தை’யொட்டி த.வெ.க., பொறுப்பாளர் ஏற்பாட்டில் 3 இடங்களில், கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நாடு முழுவதும் ‘உலக பட்டினி’ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வறுமையை சந்தித்தாலும், மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும். அந்த அளவுக்காவது நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ‘உலக பட்டினி’ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.செய்யாறில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 3 இடங்களில் ‘உலக பட்டினி’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்து , பொதுமக்களுக்கு அன்தானம், மோர், பழ ரசங்களை வழங்கினார். செய்யாறு – ஆரணி கூட்டு சாலையில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு செய்யாறு மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பொறுப்பாளர்களான அண்ணாதுரை, சாந்தி, பரத்குமார், சதீஷ், நேரு, கௌரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செய்யாறு பஸ் நிலையத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சி செய்யாறு தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் ஏற்பாட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் அருண், இணைச் செயலாளர்கள் பார்த்திபன், சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.செய்யாறு ஞானமுருகன் கோவில் அருகே நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனக்காவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சேதுபதி செய்திருந்தார். இணைச் செயலாளர் சுதர்சன், பொருளாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர் குணா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கியவர்களை பொதுமக்கள் மனதார பாராட்டினர்.
Leave a Reply