
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்புக்கு மர்ம நபர்கள் இரவில் தீவைப்பு!வேலூர், மே 24-ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் வாகனத்தை நள்ளிரவு நேரத்தில் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் மர்மநபர்கள்.வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட்டாட்சியர் ஜூப்பை நேற்று (23ம் தேதி) நள்ளிரவு 1 மணி அளவில் மர்மநபர்கள் யாரோ தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய் துறை குழுவினர் உடனடியாக ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த ஜீப்பை தண்ணீர் பீய்த்து அடித்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர். வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்து விட்டுச் சென்ற ஜீப்பை மர்ம நபர்கள் இரவில் தீயிட்டுக் கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply