21.05.2026வியாளன் மாலை பெரியநாயக்கன்பாளையம் ஜடல்நாயுடுவீதி பகுதியில் பத்தாம்வகுப்பு பனிரெண்டாம் வகுப்பில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அவர்களின் அடுத்த முயற்சிக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவுன்சிலர் தோழர் நவ. சிவராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இனிதாக்க மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர்கள் தோழர்கள் ஆர். கருப்புசாமி. எஸ். இன்பவள்ளி. கே. வெங்கிடசாமி மற்றும் திரளானோர் பங்குபெற்றனர். இளைய தலைமுறையை பாராட்டி மகிழ்வதுடன் அவர்களின் எதிர்கால கடமைகளை நினைவூட்டும் விதமாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.
Leave a Reply