உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து பெண் பணியாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி இழிவாக நடத்தி வரும் தலைமை இயக்குநரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் நிதித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனிடம் புகார் மனு அளிப்பு!வேலூர், மே 19-மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை சீராய்வு செய்து அரசின் வருவாயை ப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றி வரும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் பணியாளர்களின் தற்போதைய அவல நிலையை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவசர தீர்வு காண வேண்டி கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.தலைமை செயலக நிதித்துறை செயலாளரின் அலுவலக முற்றுகைப் போராட்டம்: பெண் பணியாளர்களிடம் மிக மட்டமான, சுயமரியாதையைக் காயப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைப் பேசுவதும், ஒருமையில் பேசி அவமதிப்பதும் இவரின் வாடிக்கையாக இருந்த காரணத்தினால் இத்தகைய அநாகரிகப் போக்கைக் கண்டித்து, கடந்த 08.07.2025 அன்று தலைமைச் செயலக நிதித்துறைப் பணியாளர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து நிதித்துறை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. இவரின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு மிக முக்கியச் சான்றாகும்.கடந்த ஆட்சியில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்: மேற்கண்ட பணியாளர் விரோத போக்கை கண்டித்தும் CAMS முறையில் விடுப்பு எடுக்கும் அடிப்படை உரிமைகளை கூட வழங்காத போக்கினை கண்டித்தும், பெண் பணியாளர்களிடம் மரியாதை குறைவாக நடத்தும் போக்கினை கண்டித்தும், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளர் மன்றம் இணைந்து கடந்த 14.07.2025 அன்று கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினோம்.அதிகார மற்றும் அரசியல் பின்னணி :இவர் முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர சிஷ்யனாக இருந்த காரணத்தினால் இவர் மீது பலமுறை மேனாள் நிதியமைச்சர் அவர்களிடமும், முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடமும் நேரில் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உதயசந்திரனிடம் இருந்த நெருக்கத்தின் காரணமாக எவ்வித நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்படவில்லை.அரசின் வருவாயைப் பெருக்கவும், நிதி ஒழுங்கை நிலைநாட்டவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் தணிக்கைத் துறை பணியாளர்களின் சுயமரியாதையையும், பெண் பணியாளர்களின் கண்ணியத்தையும் காப்பது அரசின் கடமையாகும்..எனவே, பெண்களின் பாதுகாப்பிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை காப்பதிலும் முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியிலும், கடந்த அரசின் இத்தகைய போக்கு தொடராத வண்ணம் தலைமை தணிக்கை இயக்குநர் முன்னாள் கூடுதல் பொறுப்பு வகித்த அருண் சுந்தர் தயாளனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தணிக்கை துறையில் சுமூகமான பணி சூழல் நடவடிக்கை எடுக்குமாறு இந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் மனுவை மாநில தலைவர் பா. ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ், மாநில துணைத்தலைவர் த. ஞானவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் புகார் மனுவை அளித்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அருண் சுந்தர் தயாளனை நிதித்துறை சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டது. இதற்கு இச்சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply