
ஒடுகத்தூரில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 19 -வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தென்புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி அம்பிகா (30). மணிகண்டன் பெங்களூருவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் கணவன் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்பிகா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸார் அம்பிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply