
மகளிர் கிரிக்கெட் அணிக்கு வேலூர் வீராங்கனைகள் இன்று தேர்வு: சங்கத் தலைவர் ஜி.வி. சம்பத் அறிக்கை!வேலூர், மே 10-வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாவட்டங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வேலூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு இளம் வீராங்கனைகள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வேலூர் கொணவட்டம் ராஜேஸ்வரி வளாகத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 1.9.1996-க்கு பின்னரோ அல்லது 31.8.2014 முன்னதாகவோ பிறந்திருக்க வேண்டும்.தேர்வுக்கு வருபவர்கள் ஆதார் சான்று நகல், பிறந்த தேதி சான்று நகல், கிரிக்கெட் கிட் மற்றும் வண்ண உடை அணிந்து வரவேண்டும். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க மகளிர் விளையாட்டு பிரிவு நிர்வாகி லோகேஸ்வரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.










Leave a Reply