ராய்ப்பூரில் நடந்த 11வது தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடத்தை பிடித்தது:மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வீரர்களை வாழ்த்தினார்!காஞ்சிபுரம், மே 7 -சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 11வது தேசிய கால்பந்து போட்டியில், பங்கேற்ற தமிழ்நாடு அணி தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்று வரை சென்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.17 வயதுக்கு உட்பட்ட மாநில அளவில் பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்களுக்கான 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில், ராய்ப்பூர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, பீகார், அசாம், கர்நாடகா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றனர்.அனைத்து போட்டிகளும் காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டன.’லீக் முறையில்’ நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி – இறுதிப் போட்டி வரை சென்று, 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் 2ம் இடத்தை பிடித்தது. இந்த அணிக்கு கோப்பை, கேடயங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வந்தடைந்த கால்பந்தாட்ட வீரர்களை, தமிழ்நாடு கால்பந்தாட்ட மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வெகுவாக பாராட்டினார்.இதேபோல் காஞ்சிபுரம் ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட கிளப் மேலாளர் விக்னேஷ், பயிற்சியாளர் கோகுல் ஆகியோர் கால்பந்தாட்ட வீரர்களை பாராட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply