
வாக்காளர்களுக்கு UPI மூலம் பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!வேலூர், ஏப். 17-தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க, ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை பொது முகப்பு (UPI) மூலம் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் நாள் தோறும் நடைபெறும் UPI பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஒரே கணக்கிலிருந்து பலருக்கு UPI மூலம் பணம் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், பணம் பெற்றவர்கள் மீதும் தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை பாயும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123(1)-இன் கீழ் ஊழல் நடைமுறையாகவும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பிரிவு 169-இன் கீழ் தேர்தல் குற்றமாகவும் கருதப்படுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ அல்லது வாக்காளர்கள் பணம் பெறவோ கூடாது என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.










Leave a Reply