
வேலூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஆர்.கே.அப்பு இளைஞர்களுடன் விளையாடி வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 16-வேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ். ஆர். கே. அப்பு களம் இறங்கியுள்ளார். இவர் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக வழியில் காண்போரை எல்லாம் வணங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பணிவுடன் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுகவின் வாக்குறுதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டதை விளக்கிக் கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் எஸ். ஆர். கே. அப்பு. இதில் வாக்கு சேகரிக்கும் போது புதிய நடைமுறையை புகுத்தி இளைஞர்களுடன் கேரம் போர்டு, கிரிக்கெட், பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி அவர்களை மகிழ்வித்து இளைஞர்களின் வாக்குகளை கவர்ந்து வருகிறார் எஸ். ஆர். கே. அப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. வேலூரில் நூதன முறையில் இளைஞர்களிடம், அதாவது அவர்களுடன் சேர்ந்து விளையாடி வாக்கு சேகரித்தது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. எளிமையுடனும், நட்புடனும் பழகி வருவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் தொகுதியில் அதிமுகவின் கை ஒரு படி ஓங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூதன வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply