Win Express
0
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்

Archives

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
Win Express Win Express
+(01)23-456-789
Subscribe Now
Win Express
Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express Win Express
  • செய்திகள்
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • நிகழ்ச்சிகள்
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
0
Top Read

கோவை தண்ணீர் பந்தல்மின் வாரிய அலுவலர் போதை நீர் குடித்து அலப்பறை!

1 Min Read

சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

2 Min Read

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன்பட்டியில் இருக்கும் கைத்தறி பூங்காவை ஆய்வு செய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு!

3 Min Read

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அன்னூர் பிடிஓ!குன்னத்தூரில் ரிசர்வ் சைட்டில் கோவில் கட்ட தடை!

1 Min Read
Win Express > Blog > 2026

Year: 2026

Uncategorized

செய்யாறு கலைஞர் சிலை அருகேதி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் த.வெ.க.,வின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா:துப்புரவு பணியாளர்கள் – பொதுமக்களுக்கு அன்னதானம் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

மனமகில் மன்றத்திற்கு எதிராக நாளை போராட்டம்

Posted by WIN 0 Min Read
Uncategorized

மதுரையில்மன்னர் திருமலை நாயக்கர்443-வது பிறந்தநாள்விழா!

Posted by WIN 1 Min Read
Uncategorized

செய்யாறில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிசிலை அருகே மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்எம்.கே.கார்த்திகேயன் ஏற்பாட்டில்அறுசுவையுடன் அன்னதானம் வழங்கல் !

Posted by WIN 1 Min Read
Uncategorized

தைப்பூசத்தை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில்  அன்னதானம் வழங்கல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

அரசியலமைப்பு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி – ரிபப்ளிகன் வெல்ஃபேர்  அறக்கட்டளை அசத்தல்!

Posted by WIN 1 Min Read
Uncategorized

காட்பாடி அரசு மகளிர் பள்ளியில்உயர்கல்வி கண்காட்சி அரங்கு;உயர்கல்வியே எங்கள் இலக்கு வழிகாட்டி நிகழ்வு!

Posted by WIN 1 Min Read
Uncategorized

தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்படவில்லை: ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் ஏமாற்றம்!

Posted by WIN 2 Min Read
Uncategorized

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையம்சிறந்த_காவல்நிலையம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர்முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்!

Posted by WIN 0 Min Read
1 … 71 72 73 … 85

Got a Questions?

Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.

Latest Posts

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் சோகம்: ராணுவ வீரர் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 27-காட்பாடி அடுத்தபொன்னை மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் ( 30). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.விடுப்பில் ஊருக்கு வந்த விக்னேஷ்குமார்மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விக்னேஷ் குமார் மது அருந்தியதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ்குமார் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று கதவை தாழிட்டு கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவருடைய தாய்உடனடியாக உறவினர்களின் உதவியுடன் அவரை மீட்டு பொன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ்குமார் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறையில் பணியாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து பெண் பணியாளர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி இழிவாக நடத்தி வரும் தலைமை இயக்குநரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் மாநில அரசு தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் நிதித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனிடம் புகார் மனு அளிப்பு!வேலூர், மே 19-மாநில அரசின் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை சீராய்வு செய்து அரசின் வருவாயை ப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றி வரும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் பணியாளர்களின் தற்போதைய அவல நிலையை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவசர தீர்வு காண வேண்டி கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.தலைமை செயலக நிதித்துறை செயலாளரின் அலுவலக முற்றுகைப் போராட்டம்: பெண் பணியாளர்களிடம் மிக மட்டமான, சுயமரியாதையைக் காயப்படுத்தும் முறையற்ற வார்த்தைகளைப் பேசுவதும், ஒருமையில் பேசி அவமதிப்பதும் இவரின் வாடிக்கையாக இருந்த காரணத்தினால் இத்தகைய அநாகரிகப் போக்கைக் கண்டித்து, கடந்த 08.07.2025 அன்று தலைமைச் செயலக நிதித்துறைப் பணியாளர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் ஒன்றிணைந்து நிதித்துறை செயலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பிரம்மாண்ட போராட்டம் நடத்தியது. இவரின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு மிக முக்கியச் சான்றாகும்.கடந்த ஆட்சியில் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்: மேற்கண்ட பணியாளர் விரோத போக்கை கண்டித்தும் CAMS முறையில் விடுப்பு எடுக்கும் அடிப்படை உரிமைகளை கூட வழங்காத போக்கினை கண்டித்தும், பெண் பணியாளர்களிடம் மரியாதை குறைவாக நடத்தும் போக்கினை கண்டித்தும், தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஆய்வாளர் மன்றம் இணைந்து கடந்த 14.07.2025 அன்று கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினோம்.​அதிகார மற்றும் அரசியல் பின்னணி :இவர் முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர சிஷ்யனாக இருந்த காரணத்தினால் இவர் மீது பலமுறை மேனாள் நிதியமைச்சர் அவர்களிடமும், முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரனிடமும் நேரில் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உதயசந்திரனிடம் இருந்த நெருக்கத்தின் காரணமாக எவ்வித நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்படவில்லை.அரசின் வருவாயைப் பெருக்கவும், நிதி ஒழுங்கை நிலைநாட்டவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் தணிக்கைத் துறை பணியாளர்களின் சுயமரியாதையையும், பெண் பணியாளர்களின் கண்ணியத்தையும் காப்பது அரசின் கடமையாகும்..எனவே, பெண்களின் பாதுகாப்பிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை காப்பதிலும் முக்கிய இலக்காக கொண்டு செயல்படும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியிலும், கடந்த அரசின் இத்தகைய போக்கு தொடராத வண்ணம் தலைமை தணிக்கை இயக்குநர் முன்னாள் கூடுதல் பொறுப்பு வகித்த அருண் சுந்தர் தயாளனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தணிக்கை துறையில் சுமூகமான பணி சூழல் நடவடிக்கை எடுக்குமாறு இந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் மனுவை மாநில தலைவர் பா. ஐயப்பன், மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ், மாநில துணைத்தலைவர் த. ஞானவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் புகார் மனுவை அளித்தனர். உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளர் மன்றம் மற்றும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அருண் சுந்தர் தயாளனை நிதித்துறை சிறப்பு செயலாளர் பதவியில் இருந்து பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டது. இதற்கு இச்சங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரெட்கிராஸ் தினம்: மகளிருக்கான இலவச தையற் பயிற்சி வகுப்புகளை வேலூர் கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் தொடங்கி வைப்பு!வேலூர், மே 10-இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளை சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த மனித நேய பண்பாளர் ஜீன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிளை தலைவர் அ.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது…ரெட்கிராஸ் அமைப்பு உலகளாவிய அமைப்பு மனித நேய பண்பாளர் ஜூன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாள், சர்வதேச ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் சார்பில் இலவச தையற் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைப்பத்தில் நான் மகிழ்சியடைகின்றேன். காட்பாடி ரெட்கிராஸ் கிளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட செயல்பாடுகள் செய்து வருவது பாராட்டத்தக்கது. தையற் பயிற்சி வகுப்பிலும் மேலும் கணினி பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து பயன்பெற வேண்டும். சர்வ தேச ரெட்கிராஸ் தினத்தில் மனித நேயத்துடன் பணிகள் செய்வதை பாராட்டுகின்றேன் என்றார். இந்த விழா விருதம்பட்டு செசயர் ஹோம் வளாகத்தில் உள்ள பாத் பைன்டர் அறக்கட்டளை அலுவலகத்தில் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலச்சந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.சுதாகர், சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எ.ஆனந்தகுமார், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், எஸ்.அருள்சுடர், வி.ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.இலவச தையற் பயிற்சி மையத்தினை கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் திறந்து வைத்தார். வட்டாட்சியர் ஆர்.பாலசந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
காட்பாடி தொகுதியில் காரில் இருந்து இறங்கி வந்து துரைமுருகன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.18-காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் காட்பாடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் துரைமுருகன். அப்போது கீரை சாத்து, மிளகாய்க்குப்பம் , தீயார் குப்பம் ஆகிய பகுதிகளில் தனது காரில் இருந்து இறங்கி வீடு வீடாகச் சென்று தனக்கு ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இப்படி வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய துரைமுருகனை பார்த்து வாக்காளர்கள் இது புதியதாக உள்ளது என்று முனுமுனுக்கத் தொடங்கினர். குறிப்பாக திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகளை துரைமுருகன் விளக்கிப் பேசினார். மேலும் கட்சியின் புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு அவர் பிரச்சாரம் செய்தார் .காரில் இருந்து இறங்காமல் வாக்கு சேகரித்து வந்த துரைமுருகன் இம்முறை காரில் இருந்து இறங்கி வந்து வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டது புதுமையாக உள்ளது என்று காட்பாடி வடக்கு ஒன்றிய வாக்காளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • குற்றம்
  • செய்திகள்
  • நிகழ்ச்சிகள்
  • விளையாட்டு
©2025 Win Express, powered by Grandissants Tech.