காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!வேலூர், ஆக.16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு வட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் உள்ள கொடிக்கம்பம் அருகே வண்ண வண்ண வண்ண காகிதங்களால் கோடிகள் கட்டப்பட்டு கொடிக்கம்பம் அலங்கரிக்கப்பட்டது அதை அடுத்து காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி என்பதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்தினார் இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த 80வது சுதந்திர தின விழாவில் துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் வஞ்சூர் அன்பரசன், வண்டறந்தாங்கல் இளங்கோவன், விநாயகம், ரேகா, சர்வேயர் பிரசன்னா மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பித்தனர். இந்த 80வது சுதந்திர தின விழாவில் சுதந்திர தின வரலாறு பற்றியோ, தேசத் தலைவர்கள் பற்றியோ எவ்வித விளக்கமும் இல்லாமல் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
Leave a Reply