புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!வேலூர், ஆக. 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருப்பாக்குட்டை என்.எம்.திருமண மண்டபத்தில் புதிய பாரதம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கத்தின் சார்பில் 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த விழாவுக்கு மாநில தலைவர் எம் .டி.வேல்முருகன் ,செயலாளர் வே. கயல்விழி, துணைத் தலைவர் என். முருகன், துணைச் செயலாளர் சி. சிவானந்தம், துணை செயலாளர் கே. ஜி. சீனிவாசன் ,மாநில மகளிர் அணி செயலாளர் இ.கிருஷ்ணவேணி, மாநில மகளிர் அணி செயலாளர் சி .சரளா தேவி தலைமை வகித்தனர். மாநில பொருளாளர் பி. சீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எம்.டி .வேல்முருகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட தலைவர் கே. ரோஸ், வேலூர் மாவட்ட தலைவர் ஜீவா, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் கே .பார்த்திபன், வேலூர் மாவட்ட அமைப்பு தலைவர் வில்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் மைதிலி, கோகிலா, தேவி ,கிளை பொறுப்பாளர்கள் சுஜாதா, தரணி, ஹேமா லக்ஷ்மி ,அருள் ,சந்திரா, சண்முகம் ,விஜயலட்சுமி, துளசி, நந்தினி ,விஜயா ,மோகனா ,சங்கீதா ,தனலட்சுமி ,கீதா, கருணாகரன், சுமதி, ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர் .இதையடுத்து 80வது சுதந்திர தின விழா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விமரிசையாக நடந்தது .இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூபாய் 1200 லிருந்து ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் .60 வயதுக்கு பின்பும் நல வாரியத்தில் பதிவு பெற்ற வயது முதிர்வு திருமணம் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ,திருமண உதவித்தொகை வழங்க வழிவகை செய்து தருமாறு அரசை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது. பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 60 வயதுக்கு பின்பும் இறந்தாலும் இயற்கை மரணம் உதவித்தொகை ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கிட வேண்டுமென அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என தனி வங்கி தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களுக்கு பணப்பயன்கள் எளிதில் சென்றடைய வழிவகை செய்து தர வேண்டும் என சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக் கொள்வது, கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் அனைத்து துறைகளிலும் தனி இட ஒதுக்கீடு செய்து தருமாறு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வது, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் காத்திட மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிதி ஆதாரத்துடன் தனி இலாகா தனி அமைச்சகம் அமைத்து தர எங்கள் சங்கத்தின் சார்பில் அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் .கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களான மணல் ,ஜல்லி, கம்பி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. எனவே மத்திய ,மாநில அரசுகள் தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வழிவகை செய்து தர இச்சங்கத்தின் சார்பில் அரசை கேட்டுக்கொள்கிறோம் .அனைத்து தொழிலாளர்களின் பெண் பிள்ளைகளுக்கும் கல்வி பயிலும்போது கல்வி உதவித்தொகை வழங்குவது போன்று ஆண் பிள்ளைகளுக்கும் வழங்க வழிவகை செய்து தர வேண்டும் என்று அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது .இறுதியாக மாநில அமைப்பு செயலாளர் கே. ஜி. சீனிவாசன் நன்றி கூறினார். இதையடுத்து இந்த இருபெரும் விழாவில் கலந்து கொண்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு அளித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply