கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின்’தேச உணர்வு’ ஊர்வலம்!வேலூர், ஆக. 15-ஆக.15.08.2026 – இந்திய திருநாட்டின் 80 -ஆம் ஆண்டு சுதந்திர தின திருநாளாகும்.அந்த திருநாளை இந்தியர்கள் அனைவரும் மகழ்ச்சியுடன்கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில்,வேலூர் மாவட்டம்,கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அக.14-அன்று ஒன்றிணைந்து’தேச உணர்வு!’ என்கிற ஓர் தேசப்பற்றை வெளிப்படுத்தும் உன்னதமான ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர்.சாந்தி தலைமையில் நடத்தினர்.கீ.வ.குப்பம் வட்டாட்சியர்.பாலச்சந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.உதவி தலைமை ஆசிரியர்கள். சங்கீதா,ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவிகள், இன்னுயிர் தந்து நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தலைவர்களின் புகைப்படங்களையும்,தேசியக்கொடிகள் மற்றும்மூவர்ண பலூன்களை கைகளில் ஏந்தி,தேச பக்தி கொண்ட வீர முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் வந்தனர்.மேல்மாயில் சாலையிலுள்ள பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு,கீ.வ.குப்பம் பேருந்துநிலையம் கடந்து,காவல் நிலையம் வரைசென்று ஊர்வலம் மீண்டும்பள்ளியை வந்தடைந்தது.இந்நிகழ்வில்,கீ.வ.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், ,பள்ளி கட்டட குழு பொருளாளர் நந்தகோபால், ஆசிரியர்கள் பப்பீனா, அருள் ஜோதி, ராதா, கலைவாணி, கணகேஸ்வரி, அமுதவல்லி,ஷோபா மற்றும் மகிழு முற்ற மாணவ அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஆசிரியர் சீனிவாசன் வாசிக்க மாணவிகள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.மாணவிகள் மேலும்,விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களின் உருவங்களில் மாறு வேடம் அணிந்து,பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.தேசிய ஒருமைப்பாட்டு ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகிழ் முற்ற மாணவ அமைச்சர்கள் செய்திருந்தனர்.