தமிழ்நாடு அரசுமாற்றுத்திறனாளிகள் நலத்துறை கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், பூலுவாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான “விழுதுகள்” வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் (One Stop Centre), தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வி. சம்பத் குமார் அவர்கள் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும்,மாவட்ட வருவாய் அலுவலர் சுதர்ஷன்கோவை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் பி. பாலுசாமி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் – கோவை மாவட்ட முதன்மை நிபுணர் (Key Expert) டாக்டர் அ. கரிகாலன் மற்றும் TN Rights பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் சமூக சேவை வழங்குநராக கோயம்புத்தூரைச் சேர்ந்த கௌமாரம் பிரசாந்தி அகாடமி செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான, ஒருங்கிணைந்த மற்றும் எளிதில் அணுகக்கூடிய மறுவாழ்வு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் இம்மையத்தில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும், இம்மையத்தில் உளவியல் ஆலோசனை (Counselling), இயன்முறை மருத்துவம் (Physiotherapy), அறிவுத்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி, பார்வைக் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி மற்றும் செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புக் கல்வி உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 1,593 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், தற்போது நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Leave a Reply