ஒப்பந்தம் முடியும் முன்னே தன்னிச்சையாக ஒப்பந்தமே எடுக்காதவர்களுக்கு அதிக கட்டணம் கொடுத்து லாரியை அமர்த்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ள கூட்டுறவு சார் பதிவாளர் கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமா?வேலூர், ஆக. 3-பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் காட்பாடி கிடங்கில் இருந்து (திருவலம்) காட்பாடி தாலுகாவில் உள்ள கற்பகம் கடைகள் மற்றும் கிராம நியாய விலை கடைகளுக்கு நகர்வு செய்ய கடந்த 29.1.2026 அன்று பண்டகசாலையில் நடைபெற்ற லாரி வாடகை டெண்டரில் ஒரு குவிண்டாலுக்கு இறக்கு கூலி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மற்றும் கற்பகம் கிடங்கில் இருந்து நகர்வு செய்ய ஏ.முத்து என்பவரை லாரி ஒப்பந்ததாரராக காட்பாடி கிளைக்கு நியமனம் செய்திடவும், அவருக்கு 1 கி. மீ., முதல் 13 கி.மீ., வரை ரூ. 25.50 மற்றும் 13 கி.மீ., முதல் 36 கி. மீ., வரை ரூ.34.50 வழங்கவும், 36 கி.மீ., மேல் ரூ.36 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லாரி வாடகை கடந்த 21.2.2026 முதல் அடுத்த ஒப்பந்த மேற்கொள்ளும் வரை ஏ.முத்து என்ற ஒப்பந்ததாரரை வைத்து அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற பொருட்கள் நகர்வு செய்யவும், மேலும் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் புதிய ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுக்கும் வரை அங்கீகரிக்கப்பட்ட வாடகைக்கு பழைய ஒப்பந்ததாரரே நகர்வு பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் காட்பாடி கிளை மேலாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. காட்பாடி கிளையில் நகர்வு பணிக்கு கூடுதலாக அதிக லாரிகள் தேவைப்பட்டால் ஒப்பந்ததாரரை கேட்டு அவர் அனுப்பும் இதர லாரிகளை வைத்து நகர்வினை முடிக்க வேண்டும். கூடுதலாக இதர லாரிகள் வைக்கும் போது வட்ட வழங்கல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து நகர்வுப்பணி மேற்கொள்ளவும் மற்றும் கட்டுப்பாடற்ற பொருள்கள் நகர்வு செய்யவும் காட்பாடி கிளை மேலாளர் பணிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஒப்பந்ததாரர் எ. முத்து என்பவருக்கு வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிட். , இணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ. பழனிச்சாமி கடந்த 3 2 2026 இல் வழங்கி உள்ளார். ஆனால் சி எஸ் ஆர் என்று அழைக்கப்படும் நுகர்வோர் கூட்டுறவு சார் பதிவாளர் கோபிநாத் என்பவர் எதையும் (சட்டத்தை) விதிமுறைகளை மதித்து நடப்பதில்லை. இதற்கு மாறாக ஒப்பந்ததாரரான முத்துவுக்கு வழங்கப்படும் தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூபாய் ஏழு அதிகம் கொடுத்து வேலூரில் உள்ள லாரிகளை கொண்டு வந்து செல்ஃப் என்று போட்டு இவரே தனியாக லோடுகளை ஏற்றுவது, இறக்குவது என்று வேலைகளை பார்த்து வருகிறார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் கே. வி. குப்பத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் திருவலம் கிடங்கில் இருந்துதான் அத்தியாவசியப் பொருட்களை லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. டெண்டர் விடப்பட்ட லாரிகளுக்கு லோடு வழங்காமல் இவர் தன்னிச்சையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து தனியார் வாகனங்களை உள்ளே கொண்டு வந்து லோடு ஏற்றுவதும், இறக்குவதும் என்று இவர் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இவரது அராஜகத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம். கடந்த 21.2.2026 அன்றிலிருந்து ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்ட முத்துவுக்கு எதிர்ப்பான பணிகளை தொடர்ந்து கோபிநாத் செய்து வருகிறார். அத்துடன் ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களை தான் தோன்றித்தனமாக நடத்துவது, அருவெறுக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டுவது, வேலை நேரம் போக அதிகாலை 2 மணி, 3 மணி என்று இவரது விருப்பம் போல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை வசை பாடுவது, அவர்களை வறுத்தெடுப்பது என்று இவரது விருப்பத்திற்கு ஏற்ப நடத்தி வருகிறார். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண் பணியாளர்கள், விற்பனையாளர்களிடம் ஆபாசமான வார்த்தைகளை கூறி திட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு கோபிநாத் மீது தொடர்ந்து இருந்து வருகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அரசு அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர். குறிப்பாக தவெக ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆக உள்ள இந்த வேளையில் இது போன்ற தன்னிச்சையான செயல்பாடுகள் மற்றும் அருவெறுக்கத்தக்க ஆபாச பேச்சுக்கள் பேசும் கோபிநாத் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பணியாளர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. இதுவே ஊழியர்களின் எதிர்பார்ப்பாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் யாருக்கும் மரியாதை தருவதே கிடையாது. அதே போன்று இந்த கோபிநாத்திற்கு திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4வது தளத்தில் உள்ள துணைப் பதிவாளர் சுவாதியும் நன்கு சொம்பு அடிக்கிறார் என்றே கூறலாம். இவர் அடிக்கும் ஜால்ராவிற்கு ஏற்ப இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றனர் என்றும் சொல்லலாம். முத்துவிற்கு இன்னும் 6 மாதங்கள் டெண்டர் முடிவடையாத நிலையில் இருந்தாலும் அவருக்கு டெண்டரை கேன்சல் செய்துவிட்டு ஈச்சர் வாகனம் மற்றும் இதர வாகனங்களை இவர் பணிக்கு அமர்த்தி வேலை வாங்கி வருகிறார் என்றால் இவருக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தது. இவருக்கு பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார்? .ஏன் இவர் மீது இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் புது புது ஆட்களை உருவாக்குகிறார். இப்படித்தான் பணிகளை நடத்த வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. அதை விடுத்து எப்படி வேண்டுமானாலும் நான் நடத்துவேன் என்று நடத்துவதற்கு கோபிநாத்திற்கு அதிகாரம் கொடுத்தது யார் ?என்பது சிதம்பர ரகசியமாகவோ அல்லது புரியாத புதிராகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் பெண் பணியாளர்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார் என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு. இவ்வாறு பல்வேறு குறைபாடுகள், சீர்கேடுகள், ஒழுக்கக்கேடான வார்த்தைகள் பயன்படுத்தும் கோபிநாத் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பணியாளர்களும், ஊழியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு சோதனைக்கு செல்லும் போது கணக்கில் குளறுபடிகள், இருப்பு அதிகம், குறைவு என்று வரும் இதனை பார்த்துவிட்டு தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு மாதிரியும், தனக்கு வேண்டாதவர்களுக்கு ஒரு மாதிரியும் தண்டனை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த கோபிநாத் என்று சொன்னால் அது மிகையாகாது. வேண்டாதவர்களுக்கு அபராதம், வேண்டியவர்களுக்கு மன்னிப்பு என்ற ரீதியில் இவர் செயல்பட்டு வருகிறார். இது என்ன இவர் வீட்டு சொத்தா? அல்லது அரசு சொத்தா? என்று தெரியவில்லை. இவரால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரூபாய் 25.50 க்கு இயக்கப்பட வேண்டிய கிலோமீட்டர் லாரி வாடகை ரூபாய் 53 கொடுத்து தன்னிச்சையாக செயல்படுகிறார் கோபிநாத். இவர் இப்படி இயக்குவதற்கு இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று தெரியவில்லை. ஒரு வேளை இவருக்கு திருமணம் ஆகாததால் இவர் பிரம்மை பிடித்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு சைகோ போல நடந்து கொள்கிறார் என்று சொன்னால் அது கூட நிதர்சன உண்மை ஆகும். இவரை களத்திற்கு அனுப்பாமல் அலுவலகத்தில் இருக்கையில் உள்ள பணிகளை (சீட் ஒர்க்)பார்த்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் சில ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இவரை யாராவது கேள்வி கேட்டால் அவரை வறுத்து எடுத்து விடுகிறார் இப்படி தான் தோன்றுத்தனமாக நடக்கும் இது போன்ற அதிகாரிகள் மீது அரசு தணிகை கவனம் செலுத்தி அவர்களை மற்ற பணியாளர்களுக்கு இடையூறாக இல்லாத வண்ணம் அவரை தண்டனைக்கு உட்படுத்தி குறிப்பாக அவரை பணிநீக்கம் செய்தால் கூட தகும் என்கின்றனர் ஒரு சில நல விரும்பிகள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. தமிழக முதல்வராக உள்ள ஜோசப் விஜய் தலைமையிலான பொற்கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறை அமைச்சர் இது போன்ற பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு இது போன்ற சைக்கோ அதிகாரிகளை உடனடியாக துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் பலர் திடீர் போர்க்கொடி தூக்கவும் ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு வேலூர் மாவட்ட நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ கோபிநாத் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.