கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த நான்கு நாட்களாக, 28,29,30,31, நான்கு நாட்களாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெளிப்புறம் உள்ள கதவுகள் மூடப்பட்டிருக்கிறது. ஒரு அரசு அலுவலகங்கள் வாயில் கதவு, அரசு விடுமுறை நாட்களைத் தவிர எப்பொழுதும் மூடக்கூடாது. ஆனால் சூலூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் எதற்காக மூடப்பட்டது என்பதை மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அலுவலக பகுதியில் உள்ளவர்களுடைய சில கருத்துக்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வர இருப்பதின் அடிப்படையில் இந்த கதவுகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகிறார்கள். ஆனால் எது எப்படியோ ஒரு அரசு அலுவலகம் வேலை நாட்களில், கதவுகளை நான்கு நாட்களாக மூடி வைத்திருப்பதற்கு மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும். இன்று பொது மக்களுடைய மிகப்பெரிய கருத்துக்களாக வெளி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?