கோவை மாநகர் மின் பகிர்மான வட்டத்தில் விதிகளை மீறியும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் மின் இணைப்பு வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக நுகர்வோர் அமைப்புகள் புகார் தெரிவித்தனர் கோவை டாடாபாதத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தலைமை பொறியாளர் சுமதி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநகர் வடக்கு தெற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர்களும் செயல் பொறியாளர்களும் கலந்து கொண்டன இதில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு கதிர் மதியோன் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் கோவை மாநகர மாவட்டத்தில் கட்டிட நிறைவு சான்று பெறாமல் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது என்றும் இது குறித்து புகார் தெரிவித்தால் விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டு அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் மேலும் புதிய மின் இணைப்பு வேண்டி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது மாதக்கணக்கில் மின் இணைப்பு வழங்காமல் இழுத்து காலதாமதம் செய்கின்றனர் சோலார் மின் இணைப்புகள் கட்டண குளறுபடிகள் ஏற்பட்டு அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் ஏராளமான பகுதிகளில் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் மின் கணக்கீடு செய்யப்படுவதில்லை இதனால் அதிகப்படியான கட்டணம் விதிக்கப்படுகிறது கோவை மாநகர வட்டத்தில் அனைத்து மின் மின் கம்பங்களிலும் அதிகப்படியான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன அதுபோல மின் பெட்டியிலும் திறந்த நிலையில் பழுதான நிலையில் உள்ளது மாநகர் வட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனுக்கள் அளிக்கும் போது தகவல் அளிக்காமல் ஒண்டிபுதூர் மையம் நகரியம் மாநகர் வட்ட பொது தகவல் அலுவலர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்து வருகிறார்கள் மையக்கோட்டம் லாலி ரோடு உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகத்தில் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகிறது இது போலவே நகரிய கோட்டத்திலும் நடைபெறுகிறது மேலும் பதவி உயர்வு பெற்ற அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணி ஏற்பு செய்யாமல் தற்காலிக பணி மாறுதல் என்ற பெயரில் மாநகர் வட்டத்தில் விதிகளை மீறி அதே அலுவலகத்தில் பணிபுரிய மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயல் பொறியாளர்களால் அனுமதிக்கப்படுகின்றனர் இதற்கு மேற்பார்வை பொறியாளர் செயற் பொறியாளர் உடந்தையாக உள்ளனர் மேலும் மின்வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் ஆகியோரின் சுற்றறிக்கைகளை கோவை மின் பகிர்மானத்தில் நடைமுறைப்படுத்துவதில்லை இதனால் பொதுமக்கள் கோவை மின்வாரியம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் கோவையில் தலைமை பொறியாளர் அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பல வருடங்களாக உள்ள உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்களை இயக்குதல் பேணுதல் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்படும் பணிகளுக்கு விதிகளை மீறி தொகை அளிக்கப்படுவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் இது குறித்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் பதில் அளிக்குமாறு தலைமை பொறியாளர் கேட்டுக் கொண்டும் எந்த அலுவலரும் முறையாக பதில் சொல்லாமல் மௌனம் காத்தனர் இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது
Leave a Reply