
வேலூர் மாவட்ட ஆட்சியருடன்அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கலந்துரையாடிய’காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி!வேலூர், ஜூலை 25-வேலூர் மாவட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 2026-2027-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவியர் பிரதிநிதிக்கான தேர்தல்ஜூலை.18-அன்றுநடைபெற்றது.இத்தேர்தலில்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்மாணவ, மாணவிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து,பல்வேறு துறைகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்தனர்.தேர்ந்தெடுக்கப்பட்டமாணவ பிரதிநிதிகள் தமிழ்நாடு மாதிரி பள்ளியின்உறுப்பினர், செயலரின் செயல்முறைப்படி,ஜூலை.24 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.பி.எஸ்.லீலா அலெக்ஸூடன்’காபி வித் கலெக்டர்!’- என்றநிகழ்ச்சியின் மூலம்கலந்துரையாடினர்.இக்கலந்துரையாடலின்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,”மாணவ,மாணவிகள்போட்டித் தேர்வுகளை சந்திக்க தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நாளிதழ்களை படிக்க வேண்டும். மாணவர்கள்சிறு சிறு குழுக்களாக தங்களுக்குள்ளேயேபோட்டித்தேர்வு நடத்திபொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.கணினி பயன்பாடு,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமான,அறிவுப்பூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.அதிக மனக்குழப்பங்களை தவிர்த்து,படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.உங்களது வெற்றியை மட்டும் நினைத்து முயற்சியுடன்நன்கு கவனமுடன் படிக்க வேண்டும். தினசரி நூலகம் சென்று நல்ல புத்தகங்களை படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.நீங்களே சமுதாயத்தின் எதிர்காலம். அதனால் அதிக பொறுப்பும் உங்களுக்கு உண்டு. மாணவர்கள் தாங்கள் பயிலும்10,11,12 ஆகிய வகுப்பு பாடங்களில் கவனத்துடன் பயின்றால் மத்திய, மாநில அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் மாணவர்களுக்குமிகப்பெரிய சொத்துகல்வி ஒன்று தான்.நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாதவற்றை தவிர்க்க வேண்டும்.உங்கள் பள்ளி அருகேபோதை இல்லாத பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அனைத்து மாணவர்களும்100 சதவீத தேர்ச்சி பெற்று கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் உயர்நிலையை அடைய வேண்டும்!” – எனஅறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, பள்ளி தலைமையாசிரியர் ஏ.தமிழ்பிரியா, ஆங்கில ஆசிரியை எஸ்.ஸ்ரீதேவி,பள்ளி எப்ஐஎஸ்.,வெ.சவேதா,மற்றும் கி.வெங்கடேஷ்உட்பட பலர் உடனிருந்தனர்.










Leave a Reply