வேலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!வேலூர்,ஜூலை 15-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி சுமையை குறைத்தல் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் குழந்தைகள் முதல் ஆசிரியர்கள் வரை அவர்களின் நலனை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் மாநில அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.