செய்யாறில் உதவும் கரங்கள் -அகர்வால் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் !செய்யாறு, ஜூலை 13 -செய்யாறு உதவும் கரங்களும் – நவலடி நிதி நிறுவனம் – சென்னை அகர்வால் மருத்துவமனையும் இணைந்து, ஏழை – எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.செய்யாறில் உதவும் கரங்கள் என்ற அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமையில் ஏழை – எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கண், காது – மூக்கு – தொண்டை, இதயம், பொதுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகிறது. இதுதவிர, இந்த அமைப்பு மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் ‘இருக்கும் இடம் தேடி’ தினமும் உணவு வழங்கி வருகிறது. இந்த செயல் செய்யாறு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று முன் 2ம் சனிக்கிழமை செய்யாறு கோபால் தெருவில், செய்யாறு உதவும் கரங்கள் – நவலடி நிதி நிறுவனம் – ஸ்ரீ பரணி பைனான்ஸ் மற்றும் சென்னை அகர்வால் மருத்துவமனை ஆகியவை ஒன்றிணைந்து பொது மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.முகாமை செய்யாறு உதவும் கரங்கள் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான ஆதிகேசவன் தொடங்கி வைத்தார். தலைவர் ரவிபாலன், செயலாளர் சண்முகம், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.300க்கும் மேற்பட்ட செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த மேல் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் செய்யாறு உதவும் கரங்கள் ஏற்கின்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாம் ஏழை – எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.