கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் ஏமாற்றிய அணைக்கட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோட்டி(எ) கோவேந்தன் கைது!வேலூர்,ஜூலை12-வேலூர் குட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (48). இவர் தனது சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகியோரிடம் ரூபாய் 40 லட்சம் ரொக்கப் பணத்தை வழங்கியுள்ளார். இதை வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி ரூ. 40 லட்சத்தை திருப்பித் தராமல் ஷீலாவை அலை கழித்து உள்ளனர். அத்துடன் பணத்தை திருப்பித் தராமல் இருவரும் சேர்ந்து ஷீலாவை ஏமாற்றி இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து பலமுறை பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு கேட்டு ஓய்ந்து போன ஷீலா பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.