‘மாறுவோம் மாற்றுவோம்’அண்ணாமல தொடங்கிய புதுக் கட்சிக்கு செய்யாறில் வரவேற்பு !செய்யாறு, ஜூலை 9 -அண்ணாமலை தொடங்கிய புதுக் கட்சிக்கு, செய்யாறில் புது தொண்டர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தனது உயர்பதியை உதறிவிட்டு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு மாநில தலைவர் பதவியும் வழங்கி அக்கட்சி அழகு பார்த்தது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய மூத்த கட்சிகளை ஆடவிட்டவர்.பொறுப்பு வகித்த இவரது கட்சியிலேயே இவருக்கு எதிராக பொறாமை வெடித்தது. இதையும் மீறி அண்ணாமலை தனது பணிகளை தொடர்ந்து ஆற்றி வந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் இவருக்கு வேட்பாளருக்கான ‘டிக்கெட்டை’ கொடுக்க கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால், விரக்தி அடைந்த அண்ணாமலை பா.ஜ.க., கட்சியிலிருந்து முழுமையாக விலகி விட்டார். இதற்கான கடிதத்தையும் டெல்லியில் வழங்கினார். இந்த கையோடு அண்ணாமலை கடந்த மாதம் தமிழகத்தில் புது கட்சியை ஒன்றை துவக்கினார்.கட்சி துவங்கிய அதே நாளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், படித்தவர்கள், இளம் பெண்கள் இணைய தல மூலமாக உறுப்பினர்களாக சேர்ந்தனர். செய்யாறில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை கட்சியில் இணைந்துள்ளனர். செய்யாறு வெங்கட்ராயன் சேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், இங்குள்ள புதிய உறுப்பினர்களை வழி நடத்தி வருகிறார். அண்ணாமலையின் புதிய கட்சியை குறித்து, பொது மக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், இளம் பெண்களிடம் ‘மாறுவோம் மாற்றுவோம்’ – ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அண்ணாமலையின் புதிய கட்சிக்கென, செய்யாறில் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.