
வேலூர் சரக காவல்துறை முதுநிலை நிர்வாக அலுவலருக்கு பணிநிறைவு பாராட்டு விழா!வேலூர், ஜூலை 4-வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில், வேலூர் சரக காவல் துறையில் முதுநிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, அலுவலகத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸராகவும் பணியாற்றிய எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) மகேஷ் கலந்துகொண்டு, எஸ். டீக்காராமனுக்கு பணி நிறைவு வாழ்த்துக்களைத் தெரிவித்து, பொன்னாடை போர்த்தி கவுரவித்து, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து வேலூர் ஏ.எஸ்.பி. தனுஷ்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி (HQ) சிவாஅனு பாண்டியன், வேலூர் டி.எஸ்.பி. இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, இவரின் சிறப்பான பணியைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கி பணி நிறைவு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு, எஸ். டீக்காராமனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது நீண்டகால அர்ப்பணிப்புமிக்க காவல் பணியைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.










Leave a Reply