
அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அச்சம்; மது அருந்தும் கூட்டத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!ராணிப்பேட்டை, ஜூன் 30-ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை 3வது கண் பாதை பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அரக்கோணம் காவல்துறை முறையாக வாகன ரோந்து மேற்கொள்ளவில்லை எனவும், இதன் காரணமாகவே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், பலமுறை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து போலீசார் முறையான ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










Leave a Reply