
செதுக்கரை மலை உச்சியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் சிவலிங்கம் சமூக விரோதிகளால் உடைப்பு!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செதுக்கரை மலை உச்சியில் ஆகாய லிங்கேஸ்வரர் சமேதரராக அமையப் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாக பலர் இந்த மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். இந்த மலையில்9 சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த மலை மீது உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகிய சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த இந்து முன்னணியினரும், செதுக்கரை மலையைச் சுற்றியுள்ள சிவ பக்தர்களும் ; இந்துக்களும் ஒன்றிணைந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.இதில் மாவட்ட ,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.










Leave a Reply