
திருவண்ணாமலைஅ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன்,அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம் !செய்யாறு, மே 17 -திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன், த.வெ.க.,வில் நேற்று இணைந்தார். இவருக்கு, த.வெ.க.,வின் ஒருங்கிணைப் பாளரும் – அமைச்சருமான செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி தவெகவில் அன்புடன் வரவேற்று இணைத்துக் கொண்டார்.திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மா.கி.வரதராஜன் ( 68 ). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கண்ட பதவியை வகித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் உள்ள இவர், அ.தி.மு.க.,வில் பொறுப்பு வகித்த போது, கடந்த 2006ம் ஆண்டு செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இதுதவிர, இவருக்கு அ.தி.மு.க.,வில் தொடர்ந்து 5 முறை ஒன்றிய செயலாளராக பதவியும் வழங்கப்பட்டது. இவரது மூத்த – இளைய மகன்களும் அரசியலில் இருந்து வருகின்றனர். மூத்த மகன் வசந்தராஜ் ( 37 ) முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இளைய மகன் வினோத் பிசாத் ( 35 ). அ.ம.மு.க.வில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். மொத்தத்தில் இவரது குடும்பமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மாற்றம் காரணமாகஅ.ம.மு.க.,வின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்மா.கி.வரதராஜன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப் பாளரும், அமைச்சருமான செங்கோட்டையனை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் த.வெ.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி வரவேற்று தவெகவில் இணைத்துக் கொண்டார். மா.கி.வரதராஜனின் இரு மகன்களும் த.வெ.க.,வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply