
காட்பாடி அடுத்த பொன்னையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர் அதிரடி கைது!வேலூர், மே 13-வேலூர் மாவட்டம், பொன்னை – சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள டி. ஆர்.குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காட்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் தீவிரமாக தேடியதில் குட்கா பொருட்கள் சிக்கின. சிக்கிய குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளர் பாண்டுரங்கன் மீது பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த தகவல் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply