வேலூர் பாலாற்றில் குப்பைகள் ஓட்டப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர்,மே 7-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருதம்பட்டு அருகே பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர். குறிப்பாக வேலூர் பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்வது எவ்வாறு? குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவது முழுமையாக நடக்கிறதா? என்பது குறித்து விரிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் பாலாற்றிலிருந்து மாவட்ட ஆட்சியர் புறப்பட்டார். இந்த ஆய்வு இந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.