
விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்!வேலூர், மே 4-விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விலை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.வேலூர் மாவட்டம், வேலூர் விற்பனைக் குழு செயலாளரின் அறிவுரையின்படி, வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அணைக்கட்டு தாலுகா – தார்வழி, அணைக்கட்டு, அப்புக்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளை தனித்தனியாக சந்தித்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்கள் குறித்து அலுவலர் எடுத்துரைத்தார். விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விளை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.இவ்விழிப்புணர்வு நடவடிக்கையின் போது துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த பணிகளில் இளநிலை கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் மற்றும் அலுவலக உதவியாளர் கி. அன்பரசு, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.










Leave a Reply