இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை – தமிழகத்தில் யார் பெறுவார் இந்த அரியாசனம்!வேலூர், மே 4-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதலில் 8:00 தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-ல் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். முன்பெல்லாம் நண்பகலிலேயே யார் ஆட்சி என்பதை கணித்துவிட முடியும்.ஆனால் தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக விரைவில் தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.